செட்டிநாடு கோழி குழம்பு இதற்கு என்று தனி ரசிகர்கள் உண்டு நீங்கள் சாப்பிட்டிருக்கீங்களா? இல்லையா? வாங்க எப்படி செட்டிநாடு கோழி செய்றதுன்னு கத்துக்கலாம்.கத்துக்கிட்டு சமைச்சு சாப்பிட்டு பாருங்க!! அப்புறம் நீங்களும் ரசிகர்கள் தான். என்ன ரசிகர் ஆக ரெடியா?
தேவையான பொருள்கள்:-
- கோழி – 1 கிலோ
-
கிராம்பு – 2
- பட்டை – 2
- சீரகத்தூள் – 1 ஸ்பூன்
-
சோம்புத்தூள்- 2 ஸ்பூன்
-
மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்
-
மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன்
- மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன்
- முந்திரிபருப்பு – நூறு கிராம்
- தேங்காய் – 1 மூடி
- உப்பு – தேவையான அளவு
- இஞ்சி/பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 4
-
தக்காளி – 250 கிராம்
-
பெரியவெங்காயம் – 250 கிராம்
- எண்ணெய் – 250கிராம்
முதலில் மசாலாவை அரைத்துக் கெள்ளவும்
செய்முறை;-
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, மிளகாய் முதலியவற்றை போட்டு வதக்கவும். அத்துடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
- இப்போது இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றைப் போட்டு அதனுடன் (சுத்தம் செய்து நறுக்கிய) கோழியை சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நெருப்பைகுறைத்து வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.சுவையான செட்டிநாடு கோழி குழம்பு தயார்.