கிராமங்களில் பொங்கல் அன்று காலையில் பார்ப்பவர்கள் எல்லாம் முதலில் ”””பால் பொங்கிருச்சா””” என்று தான் கேட்பார்கள் அதற்க்கு மற்றவர்கள் ”””பால் பொங்கிருச்சு””” என்று சொல்லிவிட்டு உங்களுக்கு என்று திருப்பி கேட்பார்கள். இது மிகவும் சுவையான அனுபவம். சக்கரைப் பொங்கல், வென்பொங்கல், பலகாய் குழம்பு என்று இம் மூன்றையும் செய்து கடவுளுக்கு படைத்து குடும்பத்துடன் சந்தோஷமாக உண்பார்கள். அந்தநாளில் இருக்கும் இன்பம் அந்த ஆணடு முழுவதும் இருக்கும் என்பது நம்மிக்கை. சரி நாமும் பொங்கல் வைப்போமா!!!!!!!
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – 1/2 கிலோ
- பாசிப்பருப்பு – 200 கிராம்
- வெல்லம் – 1 கிலோ
- பால் – 1/2 லிட்டர்
- நெய் – 100 கிராம்
- முந்திரி – 100
- சுக்கு – சிறிது
- ஏலக்காய் – 10
- தேங்காய் – 1
முதலில் செய்யவேண்டியவை:
- அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
- பாசிப்பருப்பை ஒரு வடச்சட்டியில் (வாணலியில்) போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும்.
- முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
- தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.
- அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால் மிகவும் சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.