தேவையான பொருட்கள்
-
துவரம்பருப்பு – 1 கப்
-
முருங்கக்காய் – 2
-
உருளைக்கிழங்கு – 3
-
கத்திரிகாய் – 5
-
மாங்காய் – 1 (கிளிமூக்கு மாங்காய்)
-
பெரிய வெங்காயம் – 2
-
தக்காளி – 2
-
பச்சைமிளகாய் – 2
-
பூண்டு – 5 பல்
-
மஞ்சள்த்தூள் – 1/2 ஸ்பூன்
-
சாம்பார்த்தூள் – 3 ஸ்பூன்
-
சீரகம் – 1/2 ஸ்பூன்
-
உப்பு – தேவைக்கு
தாளிக்க
-
எண்ணெய் – 2 ஸ்பூன்
-
கடுகு,உளுந்து – 1/2 ஸ்பூன்
-
வரமிளகாய் – 2
-
கறிவேப்பிலை – சிறிது
-
கொத்தமல்லி – சிறிது
செய்முறை
-
ஒரு கனமான பாத்திரத்தில் துவரம்பருப்பை (நன்கு கழுவிடவும்) போட்டு பருப்பு மூழ்கும் அளவிற்க்கு தண்ணிர் விட்டு அதனுடன் மஞ்சத்தூள், சீரகம் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
-
பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு 10 நிமிடம் வேகவைக்கவும்.
-
பிறகு நறுக்கிய முருங்கக்காய், உருளைக்கிழங்கு, கத்திரிகாய், மாங்காய் போட்டு வேக வைக்கவும். ( காய் போடறதுக்கு முன்னாடி சாம்பாருக்கு தேவையான தண்ணீர் ஊற்றவும்-காய் போட்ட பிறகு ஊற்றினால் காய் சரியா வேகாது+சாம்பார் சுவையாக இருக்காது )
-
காய் வெந்ததும் சாம்பார்த்தூள் சேர்த்து அத்துடன் தேவையான உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் அவ்வளவுதான் சுவையான சாம்பார் தயார்
குறிப்பு:
-
பருப்பை குக்கரில் வேகவைத்தால் சாம்பாரின் சுவை முழுமையாக கிடைக்காது. (இது எனது கருத்து மட்டும் அல்ல அனுபவம்)
-
பாத்திரத்தில் பருப்பு சீக்கிரம் வேக வேண்டும் என்றால் பருப்பு வேகும் போது சிறிது நல்லெண்ணெய் விட்டால் போதும் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
-
மாங்காய் சேர்ப்பதால புளி தண்ணி தேவையில்லை.
-
பொருங்காயம் தேவையென்றால் தாளிக்கும் போது சிறிது போடலாம்.